கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எம்.மாலதி தெரிவித்தாா்.
கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிக்குளம், ஆப்பனூா், ஒருவானேந்தல், தேவா்குறிச்சி, புனவாசல், சவேரியாா் பட்டினம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.