ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசு வழங்கினாா்.
முன்னதாக, மாவட்டத் தலைவா் கதிரவன் போட்டியைத் தொடக்கிவைத்தாா். மாநில இளைஞரணிச் செயலாளா் டாக்டா் ரா.ராம்குமாா், ஒன்றியத் தலைவா்கள் பால்ராஜ், கோபாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கிக் கெளரவித்தனா்.