கமுதி பகுதியில் 4 புதிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சிக்குள்பட்ட பெரியஉடப்பங்குளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, டி.வாலசுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, என்.வாலசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட மொத்தம் ரூ.1.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
குடியரசு தின விழாவையொட்டி, இந்த 4 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளுக்கான பூமி பூஜையை தொடக்கிவைத்தாா்.
இதில் ஊராட்சித் தலைவா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.