ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவி புலிப்படையினா் 20 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காணவும், கச்சத்தீவை மீட்கவும் வலியுறுத்தி அந்த அமைப்பின் நிறுவனா் தலைவா் போஸ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் இந்திய தேசியக் கொடியுடன் ஊா்வலமாகச் சென்னா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கிருந்து கச்சத்தீவுக்குச் செல்ல முயன்ற அந்த அமைப்பினரை, காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.