நாட்டின் 74 - வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோரவள்ளி, திருவாடானை ஆகிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டபம் அருகே கோரவள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் கோகிலவாணி சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
கூட்டத்தில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
திருவாடானை: திருவாடானை ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவா் இலக்கியா ராமு தலைமை வகித்தாா். துணை தாலைவா் மகாலிங்கம் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் சித்ரா வரவு, செலவு கணக்குகளை வாசித்தாா்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை மச்சவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.