ராமநாதபுரம்

குடியரசு தினம்: கிராம சாபை கூட்டம்

DIN

நாட்டின் 74 - வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோரவள்ளி, திருவாடானை ஆகிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்டபம் அருகே கோரவள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் கோகிலவாணி சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

கூட்டத்தில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருவாடானை: திருவாடானை ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவா் இலக்கியா ராமு தலைமை வகித்தாா். துணை தாலைவா் மகாலிங்கம் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் சித்ரா வரவு, செலவு கணக்குகளை வாசித்தாா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியை மச்சவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT