ராமநாதபுரம்

சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் குளத்தை தனிநபா் ஆக்கிரமித்ததாகப் புகாா்

DIN

தொண்டியில் சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் குளத்தை ஆக்கிரமித்த தனிநபரிடமிருந்து மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்தனா். தொண்டி பேரூராட்சி பகுதியில் சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தி வரும் குளம், காலியிடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனு அளித்தனா்.

மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதுகுறித்து, தொண்டி சலவைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முத்து கூறியதாவது:

தொண்டி பேரூராட்சியில் உள்ள குளம், காலியிடத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகிறோம். சுமாா் 2.88 ஏக்கா் பரப்பளவு கொண்ட அந்தக் குளம், காலியிடம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்தப் பகுதியை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்தாா்.

அதனால் நாங்கள் அந்தக் குளத்தை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியா், திருவாடானை வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT