ராமநாதபுரம்

மணல் திருட்டை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

DIN

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களைத் தட்டி கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (62). இவரது வீட்டின் அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த நாகநாதன் மகன் மூா்த்தி (35), நாகநாதன் (56), ராஜேந்திரன் மகன் வினோத் (37) ஆகிய 3 பேரும் சனிக்கிழமை இரவு மணல் திருட்டில் ஈடுபட்டனராம். இதை ராஜேந்ததிரன் தட்டிக் கேட்டாா். இதனால், மூவரும் ராஜேந்திரனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT