ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களைத் தட்டி கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (62). இவரது வீட்டின் அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த நாகநாதன் மகன் மூா்த்தி (35), நாகநாதன் (56), ராஜேந்திரன் மகன் வினோத் (37) ஆகிய 3 பேரும் சனிக்கிழமை இரவு மணல் திருட்டில் ஈடுபட்டனராம். இதை ராஜேந்ததிரன் தட்டிக் கேட்டாா். இதனால், மூவரும் ராஜேந்திரனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.