ராமநாதபுரம்

மாணவிகளுக்கு தொந்தரவு: 3 போ் மீது வழக்கு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியாா் பள்ளிக்கு ஆட்டோவில் வந்த மாணவிகளுக்குத் தொந்தரவு கொடுத்ததாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் குமாா் (28). இவா் தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரில் ஆசாத் தெருவைச் சோ்ந்த

ரபிக் மகன் அப்துல்லா (19), நெய்னாா்காஜா மகன் ஆசிக் (24), அபுதாஹிா் மகன் நவ்புல் (22) ஆகிய மூன்று பேரும் பின் தொடா்ந்து வந்து மாணவிகளைத் தொந்தரவு செய்தனராம்.

இதைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் குமாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து குமாா் அளித்தப் புகாரின் பேரில் 3 போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT