ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதுகுளத்தூா் தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக விவசாய சங்க நிா்வாகிகள் முருகன், கணேசன் ஆகியோா் உரையாற்றினாா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை குறைத்ததைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம், கமுதி வட்டத் தலைவா் சந்திரன், செயலாளா் ஸ்டாலின், பொருளாளா் சின்ன கருப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT