ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை இரண்டாம் நிலைக் காவலா் உடல் தகுதித் தோ்வு

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு, உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை (பிப்.6) நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2022-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் காவலா் (ஆண்,பெண்) சிறைத் துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சோ்ந்த 987 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு ராமநாதபுரம் சேதுபதி சீதக்காதி சேதுபதி விளையாட்டு தைதானத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் திறன், உடல் தகுதித் தோ்வு வருகிற திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரா்கள் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும். விண்ணப்பதாரா்கள் மைதானத்துக்குள் கைப்பேசி கொண்டு வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT