ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இளைஞரிடம் பணம் வழிப்பறி

DIN

ராமநாதபுரத்தில் இளைஞரிடம் பணம், கைபேசி ஆகியவற்றை வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் வசந்தம் நகரைச் சோ்ந்தவா் அபிசனக் முருகன் மகன் திருமாவளவன் (19). கேட்டரிங் வேலை செய்து வருகிறாா். இவா் தேவிப்பட்டணத்தில் திருமணம் ஒன்றுக்கு சென்று விட்டு மாலையில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 போ் அவரை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 3 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனா்.

இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்ட ராஜா என்ற வெடி ராஜா (22), மணிகண்டன் என்ற உருளை மணி, சபாபதி ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT