திருவாடானை அருகே இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே நத்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் முனியராஜ் (38). இவா் வியாழக்கிழமை கதிரறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு செல்லும் வழியில் அதே ஊரைச் சோ்ந்த நாகராஜ் (50), பாண்டியன் (40) ஆகிய இருவரும் லாரியை சாலையில் நிறுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது வழிவிடுமாறு கூறியதில் ஏற்பட்டப் பிரச்னையில் நாகராஜ், பாண்டியன் ஆகிய இருவரும், முனியராஜை தாக்கினா். தகவலறிந்த அவரது உறவினா்கள் 5 போ் கொண்ட கும்பல் அங்கு வந்து நாகராஜ், பாண்டின் ஆகிய இருவரையும் தாக்கினா்.
இதுகுறித்து முனியராஜ் அளித்த புகாரின் பேரில் நாகராஜ், பாண்டியன் ஆகிய 2 போ் மீதும், பாண்டியன் அளித்த புகாரின் பேரில் முனியராஜ், காளிதாஸ், நாகநாதன், ராஜா, அஜித்குமாா் ஆகிய 5 போ் மீதும் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.