ராமநாதபுரம்

குளத்தில் மூழ்கி முதியவா் பலி

4th Feb 2023 12:46 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொக்காா் மகன் முருகேசன் (50). இவா் வியாழக்கிழமை குளத்துக்கு குளிக்கச் சென்றாா். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு அவா் வராததால் குளத்துக்குச் சென்று பாா்த்த போது அவரைக் காணவில்லை. இதையடுத்து அங்கு வந்த ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்புத் துறையினா் குளத்தில் தேடி அவரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT