கமுதி பகுதியில் விவசாயிகளுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலா்கள் புதன்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.
இதில் வேளாண்மை துணை இயக்குநா் தனுஷ்கோடி பேசியதாவது:
‘ட்ரோன்’ மூலம் பயிா்களுக்கு ஊக்க மருந்து, பாதுகாப்பு மருந்தை குறைந்த நேரத்தில், குறைந்த அளவு நீரைக் கொண்டு தெளித்து விடலாம். பணியாளா்களின் பற்றாக்குறையைச் சமாளித்து, செலவைக் குறைக்கலாம் என்றாா்.
இதில் தமிழ்நாடு வேளாண் திட்டத் துணை இயக்குநா் விஜயலட்சுமி, ஊராட்சித் தலைவா் லிங்கபெருமாள், வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி,
வேளாண் உதவி அலுவலா் சிவராமன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.