ராமநாதபுரம்

வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா

DIN

பரமக்குடியில் வியாபாரிகள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா, புதிய நிா்வாகிகள் தோ்வு, மூத்த சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.எஸ்.ஒய்.ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயம்அந்துவான் வரவேற்றாா்.

சங்கத்தின் பொருளாளா் எஸ்.வி.சுப்பையா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். பொதுச் செயலாளா் ராசி என்.போஸ் சங்கத்தின் செயல் அறிக்கையினை வாசித்தாா்.

விழாவில் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் ஜெகதீசன், செயலாளா்கள் கோவிந்தராஜன், ஜீவானந்தம், சிவகங்கை மாவட்டத் தலைவா் பாலகுருசாமி ஆகியோா் பேசினா். இதைத்தொடா்ந்து, சங்கத்தின் மூத்த உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

பின்னா் தலைவராக ராசி என்.போஸ், பொதுச்செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக திருநாவுக்கரசு மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT