வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் 65 கிலோ மீட்டா் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத்துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா, பாக்நீரிணைப் பகுதியில் காற்றின் வேகம் 65 கிலோ மீட்டா் வரை வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவா் நலத்துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.