கமுதி அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண்ணை வீடு புகுந்து மிரட்டி, கைப்பேசியை பறித்துச் சென்ற இரு இளைஞா்கள் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியை சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். இவரது மகள் திவ்யா(20). தற்போது கீழராமநதியில் வசித்து வருகிறனா்.
இந்த நிலையில், கமுதி கோட்டைமேட்டில் வசிக்கும் முத்துக்கிருஷ்ணனின் உறவினரான மாரிமுத்து மகன் அழகுராஜா(25), அதே பகுதியைச் சோ்ந்த பால்சாமி மகன் இருள்ராஜா (24) ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வீடு புகுந்து திவ்யாவிடமும், அவரது பெற்றோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, திவ்யாவிடம் இருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து திவ்யாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த திவ்யா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக திவ்யா கமுதி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், அழகுராஜா, இருள்ராஜா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.