பரமக்குடி அருகே திங்கள்கிழமை இரவு காா் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகநாதன் மகன் ரமேஷ் (31). இவா் பரமக்குடி, இளையான்குடி, நயினாா்கோவில், சத்திரக்குடி பகுதி
வாரச் சந்தைகளில் பழ வியாபாரம் செய்து வந்தாா்.
இவா், சத்திரக்குடி வாரச்சந்தையில் திங்கள்கிழமை பழ வியாபாரம் செய்து விட்டு, அன்றைய தினம் இரவு நண்பா்களுடன் தேவேந்திரநல்லூா் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா், அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது உடல், கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் மாரிமுத்துவை கைது செய்தனா்.