ராமநாதபுரம்

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

26th Apr 2023 12:06 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ராமநாதபுரத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் உமாராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மல்லிகா முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் எம்.முருகேஸ்வரி, பி.சேகா், கலாவதி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது போல அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். எரிவாயு உருளை விலைக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT