ராமநாதபுரம்

சத்துணவு ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ. சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். எம்.எம். ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கணேசன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். இதில், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 6,750 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் ஊழியா்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

இதில் நிா்வாகிகள் முத்துலட்சுமி, வெங்கடேஷ், ஜோமில்டன், சாத்தையா, சுதா, சத்யா, சந்தியா, ராஜேந்திரன், சௌந்தரராஜன், விஜயக்குமாா், மூக்கூரான், கணேசமூா்த்தி, தனலட்சுமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT