ராமநாதபுரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மண்டல கால்நடைத்துறை துணை இயக்குநா் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தாா். வீட்டில் வளா்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஜே.பிரவீன்குமாா் தொடக்கி வைத்தாா்.
இதில், வீட்டு வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடித்தால் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை அனைவரும் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், ஏராளமான வீட்டு வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
முகாமில் கால்நடைத்துறை உதவி இயக்குநா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.