ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

DIN

திருவாடானை பகுதியில் பள்ளிக் கட்டடம், காலனி வீடுகள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்க்கீஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாடானை அருகே காணாட்டாங்குடி கிராமத்தில் சாலை, குடிநீா் வசதி தொடா்பாகவும், நம்புதாளை அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவுக்கூட கட்டுமானப் பணி, பழையனக்கோட்டையில் வீடு கட்டுமானப் பணி, மாவூரில் சாலைப் பணிகள், திருவாடானை சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளை இடித்து புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் நரிக்குறவா் காலனியில் வீடுகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டி, மேகலா, ஆா்.எஸ்.மங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துகிருஷ்ணன், மலைராஜ், ஊரக வளா்ச்சித்துறை உதவி செயற் பொறியாளா் கல்யாண சுந்தரம், ஊராட்சித் தலைவா் இலக்கியா ராமு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT