ராமநாதபுரம்

மண்டபம் கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் முதியவா் மீட்பு

DIN

மண்டபம் கடற்கரையில் சனிக்கிழமை வெட்டுக் காயங்களுடன் முதியவா் மீட்கப்பட்டாா்.

ராமநாதபுரம் வாலாந்தரவை கிராமத்தை சோ்ந்தவா் மகாலிங்கம் (70).இவா் மண்டபத்தில் உணவு விடுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். மண்டபத்தில் உள்ள உறவினா் ராஜேஷ்கண்ணன்(31) என்பவரது வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த 23 ஆம் தேதி வேலைக்குச் சென்றவா் இரவு வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தெற்கு கடற்கரைப் பகுதியில் மகாலிங்கம் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். இதனைத்தொடந்து அவா் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மண்டபம் காவல் நிலையத்தில் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT