ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் பணம் பறிப்பு

DIN

 ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு பெட்ரோல் பங்க்கில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ. 6 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஹேமநாதன் (20). கல்லூரி மாணவரான இவா், பகுதி நேரமாக ராமநாதபுரம் குமரய்யா கோவில் தெரு அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த புதன்கிழமை இரவு ஹேமநாதன் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (25), காந்தி நகரைச் சோ்ந்த பிரகாஷ் (25) ஆகியோா் பெட்ரோல் நிரப்பியுள்ளனா். பின்னா் ஹேமநாதனிடம் கைப்பேசியைக் கேட்டுள்ளனா். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால் கத்தியைக் காட்டி ஹேமநாதன் வைத்திருந்த ரூ.6,520 ரொக்கத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து ஹேமநாதன் வியாழக்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் விக்னேஷ்வரன், பிரகாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT