ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் பலி

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (64). மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தனது நண்பா் அசன்அலியை சந்தித்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பினாா். அப்போது, நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தாா். இந்தச் சம்பவத்தில், பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து முதலுதவிச் சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலையில் மாரிமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து, புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT