திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மாலை குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
எஸ்.பி.பட்டினம் அருகே புதுவயல் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் ஆகாஷ் (14). ஓரியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9 வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.