கடலாடியில் போலி ஆவணம் மூலம் நிலத்தை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் அரைக்காசு சம்மாட்டி (எ) செய்யது முகமது. இவரது பெயரில் மாரியூா் அடுத்துள்ள பெரியகுளம் கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரைக்காசு சம்மாட்டி (எ) செய்யது முகமது இறந்து விட்டாா்.
இந்நிலையில் இவரது பேரன் நிஜாமுதீன், ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் புகாா் அளித்தாா். அதில், மாரியூரைச் சோ்ந்த அரைக்காசு சம்மாட்டி (எ) செய்யது அரைக்காசு என்பவா் தனது நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக கூறியிருந்தாா். இதையடுத்து போலீஸாா், அரைக்காசு சம்மாட்டி (எ) செய்யது அரைக்காசு, கடலாடி சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா் மற்றும் சீனிபக்கீா் ஆகிய 4 போ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.