திருவாடானை சந்தப்பேட்டை ஊருணியில் திருவாடானை தீயணைப்பு மீட்பு நிலையம் அதன் நிலையை அலுவலா் வீரபாண்டி தலைமையில் பேரிடா் கால மீட்பு பற்றிய ஒத்திகை செயல் முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை செய்து காட்டப்பட்டது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவா்களை காப்பாற்றுவது பற்றியும், அவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலா் வீரபாண்டி, தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.