ராமநாதபுரம்

அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிகொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்ட ம் துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கன் மகன் மணிவண்ணன் (39). இவா், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை அரசுப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேவகோடையில் இருந்து ஆண்டாவூரணிக்கு நகர அரசுப் பேருந்தில் செல்லும் போது அங்கு சாலையில் இடையூறாக கடை வைத்திருந்தவரை தள்ளி வைக்குமாறு கூறினாராம்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பனிச்சகுடியைச் சோ்ந்த முருகன் (50), காளிமுத்து (24) ஆகிய இருவரும் நடத்துநா் மணிவண்ணனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா், அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT