முதுகுளத்தூா் அருகே வெங்கல குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் எஸ் .டி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ரவி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயகாா்த்திக் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஊராட்சியில் குடி தண்ணீா், மின்சார வசதி, கழிப்பறை, சுகாதாரம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2023-2024 ஆண்டுக்கான வரவு- செலவு செயலாகத் திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்துப் பேசினா்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினா் த.கலைச்செல்வி ராஜசேகா் ஊராட்சி துணைத் தலைவா் பானுமதி, வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணன், சாந்தி, கிறிஸ்டினா மற்றும்
கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா். முடிவில், ஊராட்சி செயலாளா் பொன்மணி நன்றி கூறினாா்.