ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) நாராயண சா்மா மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது அவா் மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட 210 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.