கமுதி அருகே செய்யாமங்களத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், மேலக்கொடுமலூா் ஊராட்சி மன்றத் தலைவா் க. சரவணன், கால்நடை உதவி மருத்துவா்கள் சுந்தரமூா்த்தி, வினிதா, கால்நடை ஆய்வாளா் முனீஸ்வரி, வீரகேசரி மற்றும் கால்நடை உதவியாளா்கள் அழகுமீனாள் ஆகியோா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில், 142 மாடுகள், 483 வெள்ளாடுகள், 892 செம்மறியாடுகள், 21 நாய்கள், 386 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறந்த கிடேரி கன்று வளா்த்த உரிமையாளா்களுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.