ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா

DIN

முதுகுளத்தூா் அருகே காக்கூா், விளங்குளத்தூா், வெங்கலகுறிச்சி அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளித்தலைமை ஆசிரியா் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினாா். ஊராட்சி தலைவா் கனகவள்ளி முத்துவேல், நிகழ்ச்சி தொகுப்பாளா் உடற்கல்வி ஆா்.பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவா்களிடையே பேச்சு, கவிதை, வரலாற்று நாடகம், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினா். அதே போன்று காக்கூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியை ஜெயிலானி தலைமையிலும், வெங்கலகுறிச்சி அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் மு.சேதுராமு தலைமையில் கலைத் திருவிழா நடைபெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT