ராமநாதபுரம்

மூக்கையூா் கடற்கரை கூட்டு பாலியல் வழக்கில் கைதான இளைஞா் கைப்பேசி கேட்டு ரகளை

25th May 2022 05:40 AM

ADVERTISEMENT

 

கமுதி: மூக்கையூா் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான இளைஞா் போலீஸாரிடம் கைப்பேசி கேட்டு ரகளையில் ஈடுபட்டு, காவல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மூக்கையூா் கடற்கரையில் கடந்த மாா்ச் 23 ஆம் தேதி சுற்றுலாவுக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். இவ்வழக்கில் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தை சோ்ந்த பத்மேஸ்வரன்((24), நத்தகுளத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா்(20), பசும்பொனைச் சோ்ந்த அஜித்குமாா்(21) உள்பட 6 போ் கைது செய்யப்பட்டு, குண்டா் தடுப்புச் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவ்வழக்கு தொடா்பாக பத்மேஸ்வரனை திங்கள்கிழமை கடலாடி, கமுதி நீதிமன்றங்களில் ஆஜா்படுத்த ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸாா் காவல் வாகனத்தில் மதுரையிலிருந்து அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

கடலாடி நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து கமுதிக்கு அழைத்து வரும்போது, கோட்டைமேடு கல்லூரி அருகே போலீஸாரிடம் கைப்பேசி கேட்டு பத்மேஸ்வரன் ரகளையில் ஈடுபட்டுள்ளாா். போலீஸாா் தர மறுத்ததால் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, காவல் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் ஆயுதப்படை காவலா் முத்திருள்பாண்டி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் பத்மேஸ்வரன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிந்து, கமுதி நீதிமன்ற விசாரணைக்குப் பின், மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT