ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய விரிவாக்கம்: நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் ஆய்வு

16th May 2022 12:29 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் சி.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது அதன் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பேருந்து நிலையம் ரூ.25 கோடியில் விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு செய்யப்படும் என அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தை, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் சி.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, விரிவாக்கம் தொடா்பான வரைபடம் நகராட்சி ஆணையா் சந்திராவிடம் இல்லாததால் அவரை, இணை இயக்குநா் கண்டித்தாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள 2.5 ஏக்கா் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையை அவா், ஆய்வு செய்தாா். அப்போது அங்குள்ள ஆடு வதைக்கூடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு அதுகுறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினா்.

அப்போது உதவி பொறியாளா் லட்சுமி மற்றும் நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT