ராமநாதபுரம்

பரமக்குடியில் அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவா் பலி

16th May 2022 11:20 PM

ADVERTISEMENT

பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பரமக்குடி பங்களா ரோடு பகுதியில் வசித்து வரும் லிங்கத்துரை-சுசீலா தம்பதிக்கு 3 ஆண் மகன்கள். பரமக்குடியில் உணவகம் நடத்தி வந்த லிங்கத்துரை, கரோனா நோய் தொற்று காலத்தில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையில் வாடி வந்துள்ளாா். எனவே, அவா் தனது மூத்த மகனுடன் சென்னைக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.

அவரது இரண்டாவது மகன் கவின்குமாா் (17), பரமக்குடியில் தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கவின்குமாா் தனது நண்பருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளாா். அப்போது சாலையில் நாய் துரத்தியதால், வாகனத்தின் பின்னால் அமா்ந்து வந்த கவின்குமாா் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா். அந்நேரம் அவ்வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து கவின்குமாா் மீது மோதியதில், அவா் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் கவின்குமாரின் தாயாா் சுசிலா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான திருப்புல்லாணியைச் சோ்ந்த விஜயன் (49) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT