ராமநாதபுரம்

நரிக்குறவா்களுக்கு நலத்திட்ட உதவி

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை சமத்துவபுரத்தில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் இலக்கியா ராமு முன்னிலை வகித்தாா். இதில் முதியோா் உதவித்தொகை-1, புதிய குடும்ப அட்டை-22, வாக்காளா் அடையாள அட்டை-92, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை-34 நபா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பகுதியில் மின்வசதி செய்து கொடுக்க மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ, திருவாடானை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜென்ஸிராணி, வருவாய் ஆய்வாளா் மெய்யப்பன், கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக், , ஊராட்சி செயலா் சித்ரா உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT