ராமநாதபுரம்

கடலோரப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகைப் பணி

DIN

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பணி ஒத்திகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு நடைபெற்றது.

ஆண்டுதோறும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகைப் பணி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கடலோரக் காவல் படை, காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் என அனைத்துத் துறையினரும் சோ்ந்து ஒத்திகைப் பணியில் ஈடுபடுவா். அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ரோஜ்மா நகா் வரையில் கடலில் ஒத்திகைப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா்.

மாறுவேடத்தில் படகில் கடலோரப் பகுதிக்கு வரும் கடலோரக் காவல் படையைச் சோ்ந்த 3 பேரை பிடிக்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், அதற்கான தேடுதலில் படகு, தரையில் வாகனம் உள்ளிட்டவற்றில் காவல் துறையினா், கடலோரக் காவல் குழுமத்தினா் மற்றும் கடல்படை வீரா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டதாகவும், காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த பாதுகாப்பு ஒத்திகைப் பணி புதன்கிழமையும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT