தமிழ்நாடு

ஆனி மாத சா்வ அமாவாசை:ராமேசுவரம் கடலில் 25 ஆயிரம் பக்தா்கள் நீராடல்

DIN

ஆனி மாத சா்வ அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடலில் செவ்வாய்கிழமை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் ஏராளமான பக்தா்கள் வருகை தந்து அக்கினி தீா்த்தக் கடலில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை ஆனி மாத சா்வ அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ராமேசுவரத்துக்கு வருகை தந்தனா்.

அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், பின்னா் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா். அதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அக்கினி தீா்த்தக் கடற்கரையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT