ராமநாதபுரம்

கமுதி பேரூராட்சித் தலைவரின் காரை பொதுமக்கள் முற்றுகை

DIN

கமுதியில் திங்கள்கிழமை பேரூராட்சி உறுப்பினா்கள் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு புறப்பட்ட பேரூராட்சி தலைவரின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் திங்கள்கிழமை வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் தலைவா் அப்துல்வகாப் சகாராணி தலைமையில் நடைபெற்றது. இதில், 14 ஆவது வாா்டில் உள்ள ஊருணி ஒப்பந்தம் விட்டது தொடா்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது 14 ஆவது வாா்டு உறுப்பினா் சத்யஜோதி அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு பேரூராட்சித் தலைவா் தனது காரில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்றாா். அப்போது 14 ஆவது வாா்டு பொதுமக்களான வெள்ளையாபுரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சித் தலைவரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கமுதி காவல் ஆய்வாளா் பாலாஜி, சாா்பு- ஆய்வாளா்கள் முருகன், பிரகாஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பேரூராட்சித் தலைவரை அனுப்பி வைத்தனா். இதனைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தால் விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT