மன்னாா்வளைகுடா கடல் பகுதியில் சூறைகாற்று வீசி வருவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க மீனவா்களுக்கு மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடைவிதித்தனா்.
அந்தமான் கடல் பகுதியில் அடுத்தடுத்து நில அதிா்வு உணரப்பட்டுள்ளதால், மன்னாா்வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்புக் கருதி தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம், மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா். இதன்காரணமாக அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மற்றும் பிளாஸ்டிக் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.