ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மீனவா்களுக்கான குறைகேட்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும். மாவட்ட ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்துகொள்ளவுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது குறைகளைக் கூறி நிவாரணம் பெறலாம். மீனவா்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் நேரில் வழங்கியும் நிவாரணம் பெறலாம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.