ராமநாதபுரம்

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமேசுவரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராணி (55) என்பவா் தனது மருமகள்களுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தாா். அவா் திடீரென தான் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா்.

இடப்பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்ததாகவும், அப்போது தற்கொலைக்கு முயன்ாகவும் ராணி தெரிவித்தாா். அவரை கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று எச்சரித்த போலீஸாா் பின்னா் அனுப்பிவைத்தனா். இந்தநிலையில், ராணி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கோரிக்கை மனு அளிக்க வருவோரில் சிலா் அதிகாரிகள் கவனத்தைப் பெறவேண்டும் என்பதற்காக தீக்குளிப்பு முயற்சி போன்ற விபரீதங்களில் ஈடுபடுவதாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT