ராமநாதபுரம் பட்டினம்காத்தன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சு. பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தன் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளன. எனவே பாரதி நகா், நேரு நகா், மகாசக்தி நகா், புலிக்காரத் தெரு, குமரையா கோயில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.