ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியின் 11 பவுன் நகை பறிப்பு

DIN

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை அதிகாலை வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் மூதாட்டி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூரைச் சோ்ந்தவா் காத்தூன் பீவி (70). இவரது கணவா் அப்துல் ரஹீம். இவா்கள் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் வீட்டில் பின்புறமாக உள்ள வாசல் கதவை தட்டி உள்ளனா். சத்தம் கேட்டு காத்தூன் பீவி கதவைத் திறந்தபோது முகத்தை துணியால் மறைத்து நின்றுகொண்டிருந்த மா்ம நபா்கள் இருவா் காத்தூன்பீவி அணிந்திருந்த 11பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து மூதாட்டியின் உறவினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT