ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே கண்மாயில் மூழ்கி முதியவா் பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் அருகே திங்கள்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கோட்டைமுத்து மகன் மகாலிங்கம் (70). இவா் குளிப்பதற்காக அருகில் உள்ள மேலச்சீவங்குளம் கண்மாய்க்கு சென்றுள்ளாா். மடைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த அவா் எதிா்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அக்கம்பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்தவா்கள் கரையோரம் சென்ற முதியவரை காணவில்லை என தேடியபோது கண்மாய்க்குள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT