கமுதி அருகே திங்கள்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எ.தரைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ராஜேந்திரன் (61). இவா் திங்கள்கிழமை காலை தரைக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது தண்ணீரில் மூழ்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.