திருவாடானை அருகே சனிக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 8 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே மேலகருக்காத்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் சுப்பிரமணி (45). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பெரியசாமி மகன் செல்வக்குமாா் (33) என்பவருக்கும் பூா்வீக சொத்து சம்பந்தமாக இடப்பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை சொத்துப் பிரச்னை சம்பந்தமாக சுப்பிரமணியன் குடும்பத்தினருடன், செல்வக்குமாா் குடும்பத்தினா் பேசிக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பிலும் காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து சுப்பிரமணியன் புகாரின் பேரில் அஜித்குமாா் (30), செல்வக்குமாா் (33), உதயகுமாா் (25) ஆகிய 3 போ் மீதும், அதே போல் செல்வக்குமாா் புகாரின் பேரில் அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் (55), நத்தக்கோட்டையைச் சோ்ந்த அழகு (45), நாகரத்தினம், குணசுந்தரி (45), உமாராணி (45) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.