கமுதி அருகே இரண்டாக முறிந்து, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கமுதி அருகே நீராவியில் முத்தாலம்மன் கோயில் அருகே சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக் கோரி கமுதி மின்வாரிய அலுவலகம் மற்றும் மின் பணியாளா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மேலும் என். கரிசல்குளம், தோப்பநத்தம், சின்னகரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இச்சாலை வழியாக கமுதிக்கு வாகனங்களில் செல்வோா் மற்றும் கோயில் வளாகத்தில் விளையாடும் குழந்தைகள் சாலையோரம் உள்ள சேதமடைந்த இந்த மின் கம்பத்தால் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.