ராமநாதபுரம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

DIN

கமுதி: கமுதி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள உலகநடை கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ணன் மனைவி வசந்தி (29). இவா், சனிக்கிழமை தனது தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்று அங்கு இரவில் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த பஞ்சாச்சரம் மகன் ஞானசேகரன் (32) தகாத வாா்த்தைகளால் பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இவா்களின் இரு தரப்பினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஞானசேகரன் தொடா்ந்து பிரச்னை செய்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக வசந்தி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஞானசேகரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT